முகப்பு » இலக்கியம் » திருக்குறள்

திருக்குறள் காமத்துப்பால் வாழ்வியல்

விலைரூ.300

ஆசிரியர் : புலவர் கோவிந்தம்மாள் சோதி நடராசன்

வெளியீடு: விக்னா வெஞ்சர்ஸ்

பகுதி: இலக்கியம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
திருக்குறளில் காமத்துப் பாலை விரித்துக் கூறும் நுால். ஐங்குறுநுாறு, குறுந்தொகை போன்ற அக இலக்கியப் பாடல்களும் ஒப்புமையாக கூறப்பட்டுள்ளது.

‘நெஞ்சே என் காதலைக் காண இந்தக் கண்களையும் உடன் அழைத்துச் செல்’ என்பது ஒரு குறளுக்கு விளக்கம். கணவன் பிரிவிற்குப் பின் தனித்திருக்கும் பெண், மன உணர்வுகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் தனக்குத் தானே பேசிக்கொள்கிறாள்.

மனம் நினைத்த இடத்திற்கெல்லாம் சென்று திரும்பி விடுகிறது. ஆனால் கண்கள்... அதனால் மனத்திடம் கண்களுக்கும் காதலன் இருக்கும் இடத்தைக் காட்டச் சொல்கிறாள் தலைவி. பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ள மெல்லிய உணர்வுகளை படம் பிடிக்கும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us